வவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில்் மோட்டார்சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
வவுனியா முதலாம் குறுக்குத்தெருவால் பயணித்த மோட்டார்சைக்கிள் சூசைபிள்ளையார்குள வீதியால் நகரை நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், வவுனியா